சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களின் பாவனை நரம்புகளைப் பாதிக்கும் நோய்களை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.
கேள்விக்குரிய பெரும்பாலான கிரீம்கள் தரமற்றவையே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின்படி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் திரவங்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அளவு ஒரு கிலோகிராம் இற்கு ஒரு மில்லிகிராம் ஆகும்.
எவ்வாறாயினும், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் இருப்பதாக வைத்தியர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.
தோல் புற்றுநோயின் அதிகரிப்பு மற்றும் தோல் மெலிதல், இரத்த நாளங்களின் தோற்றம் ஆகியவற்றில் அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதன் காரணமாக, உடனடியாக வெண்மையாக்கும் கிரீம்களில் இருந்து விலகி இருக்கவும் மருத்துவர் கேட்டுக் கொண்டார்.