follow the truth

follow the truth

October, 20, 2024
HomeTOP1அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான எச்சரிக்கை

Published on

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர், இந்த அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒக்டோபர் 23ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிக பலத்த காற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர்) வீசக்கூடும் என்றும் அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம்...

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை பெற்றுக் கொடுப்பதே என இலங்கை தொழிலாளர்...

சம்பளம் ஒரு இலட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்தப்பட வேண்டும்

வருடாந்த வருமானம் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வருமான...