follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மீது ஆளுங்கட்சி தாக்குதல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மீது ஆளுங்கட்சி தாக்குதல்

Published on

மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் சபை அமர்வு இன்று  ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது மஸ்கெலியா நகரில் சட்டவிரோதமாக  அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, ஆளுங்கட்சியின் உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தாக்கப்பட்டதாக உப தவிசாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தனது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில், குறித்த இருவருக்குமிடையிலான மோதலையடுத்து, சபை அமர்வுகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...