நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளினால் விருப்பு இலக்கங்கள் வழங்கப்படும் என அதன் தலைவர் ஆர்.எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அந்த எண்ணிக்கை 966 ஆகும்.