follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP2புத்தளத்தில் கூட்டணி அமைக்கவிடாமல் தடுத்தவர் ஹக்கீம், ரிஷாத் - இஷாம் மரிக்கார் காட்டம்

புத்தளத்தில் கூட்டணி அமைக்கவிடாமல் தடுத்தவர் ஹக்கீம், ரிஷாத் – இஷாம் மரிக்கார் காட்டம்

Published on

கடந்த பொதுத் தேர்தலில் புத்தளத்தில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு 33 வருடங்களின் பின்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது புத்தளத்தின் வெற்றி எனவும் இஷாம் மரிக்கார் தெரிவித்தார்.

அத்தோடு இம்முறை பொதுத் தேர்தலில் அந்த கூட்டணியை ஒன்றிணைய விடாமல் தடுத்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

33 வருடங்களின் பின்னர் கடந்த முறை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரை என்பது வரலாற்று வெற்றி எனவும் ஆனால் அந்த கதிரையில் அமர்ந்தவர் பிரச்சினைக்குரியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இம்முறை அந்த கதிரை பாதுகாக்கப்பட வேண்டிய கடமை என புத்தள மக்களுக்கு நினைவூட்டுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே புத்தள மக்கள் சுதந்திரமாக முடிவெடுக்க எந்த காரணம் கொண்டும் ஹக்கீமிடம் அல்லது ரிஷாதிடம் முடிவெடுக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இம்முறை புத்தள மக்கள் சிந்தித்து தனக்கு வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானின் தலைநகரம் லொக்டவுன்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த...

ஈஸ்டர் தாக்குதல் இறுதி அறிக்கைகளை வெளியிட கம்மன்பில தரப்பிலிருந்து அரசுக்கு காலக்கெடு

முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கைகள் இரண்டினையும் ஜனாதிபதி...

நாம் தோல்வியடைந்தோம், நமது குறைபாடுகள் என்னவென்று பார்த்து முன்னேற வேண்டும்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய...