follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்பிரித்தானியாவில் ஒமிக்ரான் - எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

பிரித்தானியாவில் ஒமிக்ரான் – எச்சரிக்கும் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்

Published on

பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு ‘அதிக விகிதத்தில் பரவுகிறது’ என்று சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.

நேர்காணில் ஒன்றில் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை கண்டிராத அளவில் பரவுகிறது.

தொடர்ந்து ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்டுகளுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

பிரித்தானியா மற்றொரு அலையை எதிர்கொள்கிறது, மீண்டும் தடுப்பூசி மற்றும் வைரஸுக்கு இடையிலான பந்தயத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் முடிந்த வரை விரைவாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போதுமானதாக இல்லை, ஆனால் 3 டோஸ் தடுப்பூசி அறிகுறி தொற்றுக்கு எதிராக சிறப்பான பாதுகாப்பு அளிக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு பூஸ்டர் தடுப்பூசி திட்டங்களை விரிவுப்படுத்த இருக்கிறோம்.

நாட்டில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் மற்றும் வாரத்திற்கு 7 நாட்களும் சுமார் 12 மணிநேரம் திறந்திருக்கும்.

சில மையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும். ஆனால், கிறிஸ்மஸ் அன்று தடுப்பூசி மையங்களை திறக்க வாய்ப்பில்லை.

தற்போது, பிரித்தானியாவில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட தீவிரம் குறைந்ததா என தற்போது வரை உறுதியாக தெரியவில்லை.ஆனால், அது அதிக விகிதத்தில் பரவுவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சஜித் ஜாவித் எச்சரித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மறைந்த பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை சனிக்கிழமை

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த...

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...