follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP2நாளை நாரஹேன்பிட்டி பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை நாரஹேன்பிட்டி பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி உத்தியோகபூர்வ மண்டபத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நாளை(11) வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.

அதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, பேஸ்லைன் வீதி நாரஹேன்பிட்டி சந்தியிலிருந்து பார்க் வீதிச் சந்தி வரை கொழும்பில் இருந்து வௌியேறும் (இடதுபுறம் கிருலப்பனை நோக்கி) மருங்கு மூடப்படவுள்ள நிலையில் குறித்த வீதியில் மற்றைய மருங்கு பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரை பொரளை நோக்கிய நுழைவுப் பாதையை போக்குவரத்துக்கு இருபுறமும் பயன்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

Forbes உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு : அம்பானிக்கு பின்னடைவு

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...