follow the truth

follow the truth

October, 9, 2024
Homeஉள்நாடுபடப்பிடிப்பு ஆரம்பம் - மலையக ரயில் சேவை மட்டு

படப்பிடிப்பு ஆரம்பம் – மலையக ரயில் சேவை மட்டு

Published on

கொழும்பிலிருந்து பதுளை வரை இடம்பெறும் மலையக ரயில் சேவை இன்று முதல் எல்ல ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வரை, காலை 7.30 முதல் பிற்பகல் 5.30 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக ரயில் மார்க்கத்தில் எல்ல மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள 9 வளைவு பாலத்தில் இலங்கை – இந்தியக் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படும் திரைப்பட ஒளிப்பதிவு நடவடிக்கைகளுக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் – உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று...

ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில்...

நாளை இலங்கை வருகிறார் அமெரிக்க அட்மிரல்

அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கேலர், நாளை(10) இலங்கைக்கு விஜயம்...