follow the truth

follow the truth

October, 9, 2024
HomeTOP2நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

நெதன்யாகுவிடமிருந்து லெபனான் மக்களுக்கு அச்சுறுத்தல்

Published on

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர்கள் உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் செய்தி ஒன்றை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களைப் பாதுகாப்பதைத் தவிர்க்குமாறு லெபனான் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இல்லை என்றால் லெபனான் மற்றொரு காசா பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என அங்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

லெபனானுக்கு மேலும் தரைப்படைகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாஹ்வின் அடுத்த தலைவர் என்று கூறப்பட்ட ஹாசிம் ஷஃபைதீன் கொல்லப்பட்டதாக பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.

எனினும் இதனை ஹிஸ்புல்லாஹ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“எங்கள் கின்னஸ் சாதனையை யாரும் முறியடிக்க மாட்டார்கள்”

கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஹொரணை, மொரகஹஹேனவில்...

வாசுதேவவின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. தேசியப்...

துனீஷியா ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கிறார் கைய்ஸ் சையத்

துனீஷியா ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இரண்டாவது...