follow the truth

follow the truth

October, 8, 2024
HomeTOP1கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோருக்கு எதிராக சீராக்கல் மனுத்தாக்கல்

Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ள கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவொன்று வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டத்திற்கு முரணாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி செயற்பட்டதன் ஊடாக கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இந்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால...

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.காவின் புதிய அமைப்பாளர் – பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் நியமனம்

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம்(08) நியமிக்கப்பட்டுள்ளார். இ.தொ.கா...

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான...