follow the truth

follow the truth

October, 8, 2024
Homeஉள்நாடுசர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாவனல்லை மாணவன் சாதனை

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாவனல்லை மாணவன் சாதனை

Published on

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் 2024ம் ஆண்டுக்கான போட்டியானது வென்சோ, சீனாவில் நடைபெற்ற நிலையில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுதி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஆர்.எம்.உஸைர் (R.M.Uzair) கலந்துகொண்டு சர்வதேச வெண்கலபதக்கம் பெற்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த போட்டியானது ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6ம் திகதி வரை சீனாவில் வென்சோவில் இடம்பெற்றிருந்தது.

கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் ஏ.எச்.ரிஸ்வான் மற்றும் எம்.ஆர்.எப்.முஜாஹிதா தம்பதியினரின் புதல்வருமாவார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால...

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.காவின் புதிய அமைப்பாளர் – பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் நியமனம்

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம்(08) நியமிக்கப்பட்டுள்ளார். இ.தொ.கா...

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான...