சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் 2024ம் ஆண்டுக்கான போட்டியானது வென்சோ, சீனாவில் நடைபெற்ற நிலையில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுதி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஆர்.எம்.உஸைர் (R.M.Uzair) கலந்துகொண்டு சர்வதேச வெண்கலபதக்கம் பெற்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த போட்டியானது ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6ம் திகதி வரை சீனாவில் வென்சோவில் இடம்பெற்றிருந்தது.
கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஏ.எச்.ரிஸ்வான் மற்றும் எம்.ஆர்.எப்.முஜாஹிதா தம்பதியினரின் புதல்வருமாவார்.