follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

சஜித்தை பிரதமராக்கி, அநுரவுடன் இணைந்து செயற்பட தயார்

Published on

பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி சஜித் பிரேமதாசவை பிரதமராக்கிய பின்னர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க மோசடி செய்பவர்களை திருடர்களை பிடிக்க செயல்பட்டால், வெளிநாட்டில் மறைத்து வைத்துள்ள பணத்தை கொண்டுவந்தால், நிபந்தனையின்றி ஆதரவளிக்க நாம் தயார் என தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இல்லாத நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எனவும், பெரும்பான்மை பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றுபடுவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளாதிருக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு...

“அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம்..” – காசா அவலம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97...

இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம்.. மாலை வரைக்கும் விமான சேவைகள் இரத்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருப்பதால் இன்று மாலை வரைக்கும் விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்வதாக ஈரான்...