follow the truth

follow the truth

October, 7, 2024
HomeTOP2இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம்.. மாலை வரைக்கும் விமான சேவைகள் இரத்து

இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம்.. மாலை வரைக்கும் விமான சேவைகள் இரத்து

Published on

இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் அபாயம் இருப்பதால் இன்று மாலை வரைக்கும் விமான சேவைகள் அனைத்தையும் இரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட்டில் இருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே 75 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. பலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்துவதும், இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் என பல ஆண்டுகளாகவே உரசல் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலை நோக்கி வீசியதுடன், தரைவழியாக இஸ்ரேலுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 250 பேரை பணய கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு ஹமாஸ் அமைப்பு பிடித்து சென்றது. இதனை எதிபார்க்காத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்து கட்டுவோம் என போர் தொடுத்தது.

தரைவழியாகவும் இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கி இன்றுடன் ஓரு ஆண்டாகிறது. ஆனால் தற்போது வரை அங்கு பதற்றம் தணிந்தபாடில்லை. மாறாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தற்போது ஈரான் – இஸ்ரேல் மோதலாக வெடித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் உளவு படை கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்தது.

” இதற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல், ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் அயன் டோர்ம் இடைமறித்து அழித்தது. இருந்தாலும் பல ஏவுகணைகள் இலக்கை தாக்கின. இதனால், ஈரான் மீதும் கடும் கோபத்தில் உள்ளது இஸ்ரேல். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்தான், ஈரானில் இரவில் செல்லக் கூடிய அனைத்து விமானங்களும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியில் இருந்து திங்கள் கிழமை காலை 6 மணி வரை அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்படுவதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானை தொடர்ந்து லெபனானும் பெய்ரூட் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்து இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை ஈரானும், லெபனானும் எடுத்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு...

சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி...

“அவள் பிறக்காமலே இருந்திருக்கலாம்..” – காசா அவலம்

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 41,500 பேர் உயிரிழந்துள்ளனர். 97...