follow the truth

follow the truth

October, 6, 2024
Homeஉலகம்இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்

Published on

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் சிலவற்றை பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த வாரம், இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களுக்கு ஜேர்மனி இடைநிறுத்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தற்போது ஹிஸ்புல்லா படைகள் மீது போர் தொடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆயுத ஏற்றுமதி தடை குறித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தக் கோரி பல நாடுகள் போராட்டம்

காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில்...

இஸ்ரேலிடம் இருந்து ஈரான் பின்வாங்கப்போவதில்லை

ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி...

“இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எரிவோம்..”

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி...