பொரளை பகுதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் கொள்ளையை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.