follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடுநேற்று மட்டும் 380, 463 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்று மட்டும் 380, 463 பேருக்கு கொவிட் தடுப்பூசி

Published on

நாட்டில் நேற்றைய தினம் 380, 463 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 338, 914 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 இலட்சத்து 24 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 28, 054 பேருக்கு இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

13, 465 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டதாக, தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் 709, 468 பேருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் 30 பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் இதுவரையில், அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114, 105 ஆக அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...