follow the truth

follow the truth

October, 2, 2024
Homeவிளையாட்டுதலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த பாபர் அசாமின் தீர்மானம்

Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.

X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், நேற்றிரவு தான் ODI தலைமை பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கூறினார்.

முன்னதாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மோசமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

அவருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி அணியின் தலைவராக இருந்தார். ஆனால் மார்ச் 2024 இல் பாபர் மீண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், 2024 டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் நாக் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணித் தலைவராக அவர் இரண்டாவது முறை தோல்வியடைந்தார்.

அங்கு, மிகவும் குறைந்த தரவரிசையில் இருந்த அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

பின்னர், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியடைந்தது.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடும் அழுத்தத்தில் உள்ளது, அதற்கு முக்கிய காரணம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுதான் என்றும் கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின்...

வெளிநாட்டு பயிற்சியாளர்களை அழைத்து வந்ததற்கான காரணத்தினை விளக்கினார் சனத்

தான் விரும்பும் வீரர்களை பாரபட்சமாக பார்க்கும் கலை தன்னிடம் இல்லை என்றும் அனைத்து வீரர்களையும் ஒன்றாக கருதுவதாகவும் இலங்கை...

திக்வெல்லவுக்கு மூன்று வருட கிரிக்கெட் தடை?

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள்...