follow the truth

follow the truth

September, 30, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகிறாரா?

Published on

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி அவர் இலங்கை வரவிருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை வருகின்ற முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பார்க்கப்படுகிறார்.

அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனும், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கடந்த காலங்களில் இந்திய – இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அவரது விஜயம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகியிருக்கவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரிக்கை

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தி அதன் உண்மைத்தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்,...

ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று (28) காலி, உலுவிடிகேயிலுள்ள...