follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP2ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

Published on

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும் அதன் உறுப்புரிமையிலிருந்தும் தாம் இராஜினாமா செய்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ருப் தெரிவித்தார்.

திருகோணமலை கிண்ணியாவிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப், தலைவர் றிசாத் பதியுதீன் கிண்ணியாவிற்கு வந்து ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார். அங்கு எனக்கு வழங்கப்பட இருந்த வேட்புமனு வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது.

பத்து வருடங்களாக இந்தக் கட்சியின் காரியங்களில் மிகுந்த அர்ப்பணிப்புச் செய்து அதிக வாக்குகளைப் பெற்றுள்ளேன். ​இப்போது ஏமாற்றமடைந்து வெளியேறுகிறேன். எனது இராஜினாமா கடிதம் எதிர்காலத்தில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

எதிர்காலத்தில் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் இருந்து போட்டியிட தயாராக உள்ளேன். எந்த கட்சி என்று சொல்ல முடியாது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத்

அரசியலமைப்பு சபைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் குறித்த நியமனம் செய்யப்பட்டதாக...

புலமைப்பரிசில் பரீட்சை சிக்கலுக்கான இறுதி தீர்மானம்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட...