follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP1எங்கள் நியமனங்களுக்கு நாங்கள் பொறுப்பு

எங்கள் நியமனங்களுக்கு நாங்கள் பொறுப்பு

Published on

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில் தெரிவித்தார்.

தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.

கண்டி வரக்காகொட ஸ்ரீ ஞானரதன அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் திப்பட்டுவ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மல்வத்து மகா நாயக்க தேரரை தரிசித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி :- பொதுத் தேர்தலுக்கான உங்களின் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

பதில் :- பொதுத்தேர்தலுக்கு நாம் நன்கு தயாராக வேண்டும், நாட்டை இன்னும் சிறப்பாக மாற்றக்கூடிய ஒரு அணி தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி:- மூன்று பேர் கொண்ட அமைச்சரவை நாட்டின் பொறுப்பை நிறைவேற்ற முடியுமா?

பதில்:- இந்த நேரத்தில் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.

கேள்வி:- குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளன.

பதில்:- எங்களின் ஆட்சியில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். இதுபோன்ற மாற்றங்கள் தொடரும்.

கேள்வி:- குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:- அவர்களில் சிலருக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- கல்வித்துறை சரியாகச் செயல்படவில்லை என்ற கருத்து சமுதாயத்தில் உள்ளது. அதை முறைப்படுத்த திட்டம் உள்ளதா?

பதில்:- தேசியப் பாடசாலைகளின் தலைமையாசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, இன்று கல்வியின் மீதுள்ள நம்பிக்கை உடைந்துவிட்டது குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்குச் செல்வதற்கான பின்னணியை ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் தொடர வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவுகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி...

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி விகிதம்

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை...

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல் உண்மைக்கு புறம்பானவை

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித்...