follow the truth

follow the truth

September, 27, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபாராளுமன்ற உறுப்பினர்கள் 79 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் 79 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்

Published on

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, சுமார் 79 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் 45,000 ரூபாவை வாழ்நாள் ஓய்வூதியமாக பெறுவார்கள்.

ஆனால், அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் 20, 2020 அன்று தொடங்கியது. அதன்படி, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்...

“மோட்டார் சைக்கிள் உரிமம் எடுத்தவர்கள் விமானம் ஓட்ட முடியாது” – தமிதா

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை ஆதரித்து பேசிய நடிகை...

எஸ்.பி.திஸாநாயக்க திசைக்காட்டிக்கு?

பொதுத் தேர்தலில் திசைகாட்டி 65 இலட்சம் வாக்குகளைப் பெறும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு...