follow the truth

follow the truth

September, 25, 2024
HomeTOP1இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

Published on

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் (Moody’s) தெரிவித்துள்ளது.

இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து கருத்து தெரிவித்த மூடிஸ், சர்வதேச முதலீடு மற்றும் கடன் தரமதிப்பீட்டு சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அது மேலும் கூறுகிறது.

எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது, இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை என மூடிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில், நிலையான, வளமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் கூடிய எதிர்காலத்தை இலங்கை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால்...

IMF உடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி...

கடவுச்சீட்டு வரிசை அடுத்த மாதம் 20ம் திகதியுடன் நிறைவு

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக...