follow the truth

follow the truth

September, 24, 2024
HomeTOP1புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

Published on

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

எனினும் விசாரணைகளின் பின்னர் நியாயமான தீர்வு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்கள பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். கொழும்பில்...

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு...

விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின்...