ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு வருவதற்கு 06 தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, தென்னாபிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, பொட்ஸ்வானா, லெசதோ மற்றும் சுவாஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.