follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉலகம்தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

Published on

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்த திட்டத்தை இடைக்கால அரசு இன்னும் அறிவிக்காத நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற அரச எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து பிரதமர் ஷெய்க் ஹசீனா பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்தே யூனிஸின் இடைக்கால அரசு நியமிக்கப்பட்டது. எனினும் புதிய தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றி யூனிஸின் அண்மைய உரையிலும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மக்கள் விரும்புவதால் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் யூனிஸ் தீர்க்கமான சீர்திருத்தங்களை செய்து, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மூன்று மாதத்தில் தேர்தலை நடத்தும்படி ஆரம்பத்தில் கோரிய பங்களாதேஷ் தேசிய கட்சி, பின்னர் இடைக்கால அரசின் சீர்திருத்தங்களை அனுமதிப்பதாக குறிப்பிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவின் அடிமடியிலேயே கை வைத்த சீனா

சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது. இதனால்...

கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட்...

சீனாவைத் தவிர ஏனைய நாடுகளுக்கு ட்ரம்ப் இனது புதிய வரி விதிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி...