நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது தமிழ் பேசும் எம்.பிக்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காகவே சில சிறுபான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களான ஹாரிஸ், முஷாரப் ஆகியோர் குறுக்கிட்ட போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, சில எம்.பிக்கள் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானுடன் இணைந்து சிறுபான்மை இன மக்களுக்கு அநீதியிழைத்து வருவதாகவும் சாணக்கியன் எம்.பி குற்றஞ்சாட்டினார்.
முஸ்லிம் எம் பிக்கள் அரசுக்கு ஆதரவளிப்பதற்கு தனிப்பட்ட காரணங்கள் தான் இருக்குமென கூறிய சாணக்கியன் , கிண்ணியா சம்பவம் நினைவில் இல்லையா?அந்த பிள்ளைகள் அங்கே இறந்த தினமன்று கொழும்பில் அரசாங்கம் நவீன பாலத்தை திறந்துவைத்ததையும் நினைவிற்கொள்ளுங்களென தெரிவித்தார்.