follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

Published on

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

காலி சமனல விளையாட்டரங்கில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறியதாவது:

”நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா என மக்களிடம் கேட்கிறேன். மாற்றம் தேவை என்கிறார்கள். பங்களாதேஷத்தில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா துரத்தப்பட்டார். நாட்டை முன்னேற்றிய தலைவி போராளிகளால் விரட்டப்பட்டார். இன்று பங்களாதேஷில் 19 மணி நேர மின்வெட்டு அமுலில் உள்ளது. இந்த நாட்டிற்கும் அப்படியொரு மாற்றம் தேவையா என்று கேட்கிறேன். எனவே இந்த தேர்தலில் சரியான முடிவை எடுங்கள். இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, உலகின் ஏனைய நாடுகள் இருந்த இடத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது சேவை நாட்டுக்கு தேவை. ஜனாதிபதியினால் இரண்டு வருடங்களுக்குள் இலங்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால்...

வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் – வீடியோ எடுத்தல் தடை

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ...