ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக செல்வந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்த பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், ஒமிக்ரோன் சமூக பரவலாக மாறி, அலையாக உருவெடுத்தால் கொரோனா தடுப்பூசியின் தேவைகள் அதிகரிக்கும்.
இதனால், ஒமிக்ரோன் வைரஸ் அச்சத்தால் செல்வந்த நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.