follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்

Published on

‘இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வீதியில் நிற்கும் நேரத்தில், எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து வழிவிட்டுச் சென்றார். அப்போது அந்த பொறுப்பை ‘முடியும்’ என ஏற்க ஒருவர் மாத்திரமே முன்வந்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனம் மட்டுமே இருந்தது.

அவ்வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தயின் சில உறுப்பினர்களும் அந்தந்த கட்சிகளில் இருந்துகொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தனர். அப்போது நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டு மக்களுக்கு உதவவே அவர்கள் இவ்வாறு ஆதரவு வழங்கினர் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் நேற்று (15) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கமேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்று அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இன்று நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொறுப்பை ஏற்று, இலங்கை மீதான சர்வதேச சமூகத்தில் நாம் இழந்திருந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.

நீண்ட காலமாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றிய தலைவர் என்ற வகையில் அந்த நம்பிக்கையை மிக விரைவாக கட்டியெழுப்ப முடிந்தது. 2022ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது. அதேநேரம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்தது. எனவே மிகவும் சிரமப்பட்டு அடைந்த முன்னேற்றம் தொடரும் வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்ற வேண்டும்.’’ என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை மீண்டும் ஏற்கும் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய...

எனக்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் கடிதங்கள் வருகின்றன.. பதில் வேண்டுமெனில் NPP இற்கு வாக்களியுங்கள் – பிரதமர்

தமக்கு தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் கிடைக்கின்றன என்றும், அந்தக் கடிதங்களில் பெரும்பாலானவை, குறிப்பாக 900க்கும் மேற்பட்டவை, கிராம மட்டத்திலேயே...