follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP2ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் 71 இலட்சம் வாக்குகளுடன் களமிறங்கியுள்ளார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் 71 இலட்சம் வாக்குகளுடன் களமிறங்கியுள்ளார்

Published on

ரணில் விக்கிரமசிங்க 71 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்குவார் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த போராட்டத்தில் பங்குகொள்ள அனைவரையும் அழைக்கிறோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கேகாலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,000,000. இந்த நாட்டில் சராசரி வாக்கு சதவீதத்தின்படி 85% மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதும் போது, ​​வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 13,600,000 ஆகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகள் 51% அல்லது 6,936,000 ஆகும். 2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 6,853,690 ஆகும்.

ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் 2,771,980 ஆகும். இது தவிர தேசிய மக்கள் சக்தி 445,958 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 250,000 வாக்குகளையும் பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் 250,000 வாக்குகளும், பொதுஜன பெரமுனவின் 69 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செல்வதால், அவருக்கு 71 இலட்சம் வாக்குகள் என்ற தெளிவான பலம் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதிலிருந்து பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு 10 இலட்சம் வாக்குகளும், தேசிய மக்கள் சக்திக்கு 10 இலட்சம் வாக்குகளும் பகிர்ந்தளிக்கப்பட்டால், 51 இலட்சம் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கும்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் 28 இலட்சம் வாக்குகள் பயன்படுத்தப்படாததால், இம்முறை 10 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் என்றும் அதனால் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவார் என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகளும் ஜனாதிபதியுடன் இருப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு...

அனுராதபுரம் – காங்கேசன்துறை ரயில் சேவை வழமைக்கு

இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள், சங்கத்துடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தம்...

இந்த நாட்டின் பொருளாதாரம் மக்களால் கட்டியெழுப்பப்படும். இனி நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னர் தற்போதுள்ள அரசியலை மாற்ற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...