follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP2கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

Published on

நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) உத்தரவிடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

Forbes உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு : அம்பானிக்கு பின்னடைவு

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...