follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉள்நாடுonline ஊடாக புதிய மாணவர்கள் இணைத்தல் - 10 மில்லியன் ரூபா சேமிப்பு

online ஊடாக புதிய மாணவர்கள் இணைத்தல் – 10 மில்லியன் ரூபா சேமிப்பு

Published on

இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது.

இதனால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். இம்முறை 04 மாதங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சேர்ப்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபரின்; அனுமதியுடன் இந்த பணிக்கான முழு தொழில்நுட்ப ஆதரவையும் information institute of Technology வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...

லொறி கவிழ்ந்து விபத்து – தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் அந்தப்...