follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை - இனி வாரத்தில் 4 நாட்கள் சேவையில்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை – இனி வாரத்தில் 4 நாட்கள் சேவையில்

Published on

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கப்பலுக்கு போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், வாரத்தில் 3 நாள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிர்வாகம் அறிவித்தது.

எனினும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை (18) அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மருத்துவப்...

அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய...

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண் பிரதமர்”

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமராக ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...