follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2"மலையக மக்களுக்கு வாக்குறுமை பெற்றுத் தந்தவர் ரணில் விக்ரமசிங்க" - வடிவேல் சுரேஷ்

“மலையக மக்களுக்கு வாக்குறுமை பெற்றுத் தந்தவர் ரணில் விக்ரமசிங்க” – வடிவேல் சுரேஷ்

Published on

மலையக மக்களுக்கு வாக்குறுமை பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்ககூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்திருந்தார்.

ஹப்புத்தளையில் இன்று (08) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்;

“மலையக மக்களுக்கு வாக்குறுமை பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் மறக்ககூடாது. மலையக மக்களின் வீட்டுத் திட்டங்கள், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை, கல்வியற் கல்லூரிகள் என்று பல சேவைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருக்கிறார். 1700 சம்பள அதிகரிப்பையும் ஜனாதிபதி உறுதி செய்வார் என்று நம்புகிறோம்.

மலையகத்தின் தமிழ் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைத்துள்ளார்.. எனவே நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிப்போம். அன்று கொன்று தள்ளிய தோட்ட அதிகாரிகளையும், தீயிட்டு கொழுத்திய தொழிற்சாலைகளையும், மக்களின் அடையாள அட்டைகளையும் அவர்களால் பெற்றுத்தர முடியுமா?” என்றும் வினவினார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...