follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1தேர்தல் முறைப்பாடுகள் 2800 ஐ தாண்டியது

தேர்தல் முறைப்பாடுகள் 2800 ஐ தாண்டியது

Published on

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் மேலும் 209 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2863 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (07) வரை இந்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1041 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1822 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2775 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகளில் 12113 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டு 750 முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...