follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் கைது

மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் கைது

Published on

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...