கொரோனோவுக்கு எதிரான தடுப்பூசி இரண்டையும் கட்டாயம் பெறவேண்டும் என்ற சட்ட நடைமுறையை அமுல்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நிலவி வரும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவது குறித்த பேச்சுவார்த்தையொன்று இன்றைய தினம் சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டை முழுமையாக முடக்காமல் வேறு வழிகளில் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.