follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2இலங்கை தமிழரசு கட்சி இரண்டாகப் பிளவு

இலங்கை தமிழரசு கட்சி இரண்டாகப் பிளவு

Published on

வவுனியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குழு ஒன்று கூடி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் என தீர்மானம் எடுத்திருந்தது தமது கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அல்ல என அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை எடுக்க கட்சியின் கூட்டம் கூடும் என்பது கூட தனக்கு தெரியாது என சேனாராதிராஜா தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முடிவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் உத்தியோகபூர்வ முடிவாக கருத முடியாது என சேனாதிராஜா தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பது கட்சியினால் எடுக்கப்பட்ட பொதுவான தீர்மானம் அல்ல என்றும், அது ஒரு சிலரால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட தீர்மானம் என்றும் சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

எஸ்.ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சி.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ நேசன் மற்றும் முக்கியத் தலைவர்கள் ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...