follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடு‘தாய், தந்தை, மகன் உயிரிழப்பு’ : விபத்து அல்ல – தற்கொலையே!

‘தாய், தந்தை, மகன் உயிரிழப்பு’ : விபத்து அல்ல – தற்கொலையே!

Published on

ரொசல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் நேற்று (08) முற்பகல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணமடைந்த சம்பவம் ஒரு தற்கொலைச் சம்பவமென தெரிய வந்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் மோதுண்டு எஸ்.பிரான்சிஸ் (70) (தந்தை), பி.கமலாவதி (65) (தாய்), பிரான்சிஸ் குமார்ராஜ் (40) (மகன்) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த மூவரின் சடலங்களும் அதே ரயிலில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் தமது வீட்டை மூடிவிட்டு வீட்டிலிருந்து தலைமறைவாகியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த மகன் மசாலா தூள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும், அவர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரைத் தேடி அவரை திருமணம் முடித்த பெண்கள் என கூறி ஏற்கனவே பல பெண்கள் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறிபத்த நபர் பல்வேறு நபர்களிடம் பணம் மற்றும் நகைகளை பெற்று ஈடு வைத்து அதனை மீட்க முடியாத நிலையில், அவருக்கு எதிராக பண மோசடி தொடர்பில் பிரதேசவாசிகள் திம்புளை – பத்தனை பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.

அதேபோல் கடன் கொடுத்தவர்களில் பலர் உயிரிழந்த மகனை தேடி பல முறை அவர் வசித்த வீட்டுக்கு வந்துள்ளதாகவும் போகாவத்தை மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நகையொன்றை ஈடு வைத்து அதனை மீட்டுத் தரவில்லை எனும் சம்பவம் தொடர்பில், மரணமடைந்த நபருக்கு எதிரான முறைப்பாட்டை நேற்றையதினம் (08) பொலிஸார் விசாரணை செய்யவிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடனாளிகளிடமிருந்து தப்பிக்க உயிரிழந்த மகன், தந்தை மற்றும் தாயுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் நேற்றையதினம் (08) றொசெல்ல புகையிரத நிலையத்திற்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் உடரட்ட மெனிகே புகையிரதம் வரும் நேரத்தை அறிந்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்தே, றொசெல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...