follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP2அவாமி லீக் தலைவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது எப்படி?

அவாமி லீக் தலைவரின் சடலம் இந்தியாவில் கரையொதுங்கியது எப்படி?

Published on

பங்களாதேஷ் மாணவர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவாமி லீக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் சடலம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் அவாமி லீக் தலைவரும், ஹசீனாவின் தீவிர ஆதரவாளருமான இஷாக் அலி கானின் சிதைந்த உடல், இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் உள்ள இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவரது விமான அனுமதிப்பத்திரத்தின் மூலம் சடலம் யார் என்பதும் தெரியவந்துள்ளது.

பங்களாதேஷத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்துக்குப் பிறகும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் போதே அவர் இவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த போராட்டத்தின் போது பாராளுமன்றத்தை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் நாட்டின் நீதித்துறையை தொட்டது சர்ச்சைக்குரிய விடயம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் பின்னர் இனவாத மற்றும் மத முகத்தை எடுத்தது மற்றும் நாட்டின் சிறுபான்மை இந்துக்கள் மீதான துன்புறுத்தல் உலகளவில் விமர்சிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் சுகாதார அமைச்சின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1971 சுதந்திரப் போருக்குப் பிறகு பங்களாதேஷ வரலாற்றில் மிக மோசமான ரத்தக்களரியாக இது பதிவாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

பயணச்சீட்டு, மிகுதிப் பணம் வழங்காத பஸ் நடத்துநர்கள் தொடர்பில் முறைபாடு

பஸ்ஸில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத பஸ் நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடு...

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம்

எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி...