follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2வாயை மூடிக்கொள்ளுமாறு நந்தலாலுக்கு அநுர தரப்பு எச்சரிக்கை

வாயை மூடிக்கொள்ளுமாறு நந்தலாலுக்கு அநுர தரப்பு எச்சரிக்கை

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதாரம் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு விடய நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் நாடு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய வங்கியின் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் கண்டறிந்ததை நினைவுகூர்ந்த ஜயதிஸ்ஸ, மத்திய வங்கி ஆளுநர் அரசியல்வாதிகள் சொல்வதைக் கூறக்கூடாது, பாட அறிவைப் பயன்படுத்தி நடைமுறை விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை மீண்டும் ஏற்கும் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...