follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1அடுத்த 02 - 03 வருடங்களில் மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும்

அடுத்த 02 – 03 வருடங்களில் மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும்

Published on

நீண்ட காலமாக LNG மின் உற்பத்தி நிலையங்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தவும் நீண்ட காலம் பிடித்தது. இன்று ஒரு திருப்புமுனையாக ‘லக்தனவி’ நிறுவனம் முன் வந்து முதலீட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டதுடன் நாட்டில் வலுசக்தி பாதுகாப்பிற்காகவும் மின்சாரத்துறையின் செலவைக் குறைப்பதற்காகவும் இந்த புதிய மின் உற்பத்தி நிலையம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் எத்தனை மணிநேரம் மின்சாரம்
விநியோகிக்கப்படுகிறதோ அதைவிட அதிகமான மணிநேரம்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதை இன்று பலர் மறந்துவிட்டனர். 2022
ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த நாட்டில் 16 மணி நேரம்
மின்சாரம் தடைப்பட்டது. மின் உற்பத்தி நிலையம் இருந்தபோதிலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை வழங்க முடியவில்லை. மின்சார சபை உட்பட அரச நிறுவனங்கள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன.

மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு வழங்கினார். அப்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் வழங்கிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களின் காரணமாக மின்சாரத் துறையின் செலவை ஈடுசெய்யும் விலைச்சூத்திரத்தை செயற்படுத்தி செலவை ஈடுசெய்ய முடிந்தது.

மின்சார சபைக்கு பணம் செலுத்தும் திறன் இல்லாமல், இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காது. எனவே இன்று இவ்வாறான பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...