follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1ஏமாற்று தலைமைகளான ஹக்கீம்,ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்

ஏமாற்று தலைமைகளான ஹக்கீம்,ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம்

Published on

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க அம்பாறை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமுள்ளன.

ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது ஆதரவினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும் கிழக்கில், ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகளும் கிழக்கு மாகாணத்தில் பரவலாக ஓட்டப்பட்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளான ஹக்கீம் மற்றும் ரிஷாத் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஏமாற்று அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் சுயநல அரசியல் ஒழிய வேண்டும் என்றும் அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியாழேந்திரனுக்கு பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள...

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் நாளை

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாக நாளை அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி...

பலஸ்தீன் – காஸா மக்களுக்காக குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திப்போம்

பலஸ்தீன் - காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் அகில...