follow the truth

follow the truth

September, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்

Published on

நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள் உயரிய குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இந்தத் துறையை பாதுகாத்தது ஐக்கிய மக்கள் சக்தியே. சிவில் பாதுகாப்புத்துறை ஊடாக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு அதிகாரிகள் அனைவருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான 24 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது, அவர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்ற போது அவை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிடைக்கும். சுய விருப்பின் பேரில் ஓய்வு பெற விரும்புகின்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.

இதற்கு மேலதிகமாக பதவி உயர்வு முறைமைகள், கூட்டுக் கொடுப்பனவுகள், ஊனமுற்ற சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நிவாரணங்கள் என்பனவும் வழங்கப்படும். அநியாயமான முறையில் சேவையிலிருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அந்த தொழிலைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்மூன்றாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(24) தெஹியத்தகண்டிய பொதுச்சந்தைச் வளாகத்திற்கு அருகில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...