follow the truth

follow the truth

April, 17, 2025
HomeTOP1அநுராதபுரத்தில் இன்று நாமலின் முதல் பேரணி

அநுராதபுரத்தில் இன்று நாமலின் முதல் பேரணி

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் முதல் பிரசாரக் கூட்டம் இன்று (21) நடைபெறவுள்ளது.

இதன்படி அநுராதபுரம் கடப்பனஹ பகுதியில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பேரணியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்தாலும் மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் எனவும், அடிமட்டத்தில் உள்ள அனைவரும் மீண்டும் பொஹட்டுவவில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடப்பனஹ மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு வெளி மாகாணங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர வேண்டாம் என கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பிற கட்சியினர் வெளியூர்களில் இருந்து ஆட்களை பஸ்களில் அழைத்து வந்து கூட்டத்தை காட்டினாலும் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

எனினும், அநுராதபுரம் கடப்பனஹ பகுதியில் இன்று (21) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...