follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1குரங்கம்மை வைரஸ் தொடர்பில் வழிகாட்டல் கோவை விரைவில் வௌியிடப்படும்

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் வழிகாட்டல் கோவை விரைவில் வௌியிடப்படும்

Published on

குரங்கம்மை வைரஸ்(Mpox) தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று தொடர்பில் உலகளாவிய ரீதியில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

Mpox வைரஸ் தற்போது மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க வலய நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை பாதிப்பு ஸ்வீடனில் பதிவாகியுள்ளது.

குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...