follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2ராஜிதவின் தீர்மானம் இன்று

ராஜிதவின் தீர்மானம் இன்று

Published on

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தரப்பில் விசேட பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர்களுடன் நேற்று (12) இரவு பாணந்துறை பிரதேசத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இன்று (13) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் பங்குபற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் ஒருவர்.

முன்னாள் அமைச்சரின் அரசியல் தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தடையாக இருக்காது என களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியிடன் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக செய்தியாளர் மாநாட்டை நடத்தத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...