follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2ஓரமாய் ஒதுங்கிக் கொண்டார் சந்திரிக்கா

ஓரமாய் ஒதுங்கிக் கொண்டார் சந்திரிக்கா

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான விசேட கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அத்தனகல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து தமது நிலைப்பாட்டை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அங்கு கருத்து தெரிவித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும், அத்தனகல்ல பிரதேசத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையோ எதிர்ப்போ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் எனவும் கட்சியின் ஆதரவாளர் எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...