follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2ராஜபக்ஷவை எதிர்த்தவர்களுக்கு சரிப்பட்டு வராது - ஜோன்ஸ்டன்

ராஜபக்ஷவை எதிர்த்தவர்களுக்கு சரிப்பட்டு வராது – ஜோன்ஸ்டன்

Published on

பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் மக்கள் வருவார்கள் அதற்கு எல்லாம் தயாராக உள்ளது என்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக தலை தூக்க முடியாது. அதேபோன்றதொரு விடயம் இன்று சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அடிமட்ட மக்கள் ஒன்று கூடியுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணுகிய சிலர் மீண்டும் கட்சிக்கு வருமாறு பேசியதாகவும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த வாக்குகளுக்கு வீழ்ச்சியடைவார் என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன ஒரு இளம் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைத்துள்ளதாகவும், அவரைச் சுற்றி அனைவரும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நடந்தது போல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...