follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

Published on

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே. டி. லால் காந்தவை கைது செய்து விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

எவ்வாறாயினும், தாம் வழங்கிய கருத்துக்களில் சிக்கல் இருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு கடுகன்னாவ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்தவை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திலித் ஜயவீரவுக்கு ஆதரவான குழுவில் உள்ள பொஹட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆளும் கட்சியை விட்டு வெளியேறி அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் போது நாட்டின் பாராளுமன்றத்தை கைப்பற்ற மக்கள் விடுதலை முன்னணி திட்டமிட்டதாக கே.டி. லால்காந்தவின் பகிரங்க அறிக்கையே அவர் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்தால், தன்னை கைது செய்து காட்டுமாறு நானும் சவால் விடுக்கிறேன் என லால்காந்த தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை சமர்ப்பித்த சட்டத்தரணிகள், குற்றவியல் சட்டத்தின் ஆறாவது பிரிவின் பிரகாரம் மரண தண்டனைக்குரிய குற்றத்தை லால்காந்த செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...